மும்பையில் குடும்பத்துடன் வாக்குபதிவு செய்த சச்சின் !

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.  காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளிலும் ஹரியானாவில்  உள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வருகின்ற 24ம் தேதி தேர்தல் ரிசல்ட் வருதாக அறிவத்துள்ளனர்.நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் சென்று வாக்கு பதிவு செய்துள்ளார்.

author avatar
Vidhusan