சாலையில் வீசப்பட்ட ரூ.1,56,61,560!விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என கண்டுபிடிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.7 கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த 23 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதனால் கடந்த மார்ச் 10 ஆம் தேதி முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலில் இருந்தது.பின்னர் அது நேற்றுடன் தளர்த்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

சென்னை கோட்டூர்புரம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த மர்மநபர் தன்னிடம் இருந்த 3 பைகளை சாலையில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.பின் அந்த பையை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.அந்த பையில் ரூ.1,56,61,560 மதிப்பிலான பணம் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் ரூ.1.5 கோடி பணத்தை கைப்பற்றிய போலீஸ், இருசக்கர வாகனத்தில் சென்றவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் பாலசுப்ரமணியன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Comment