ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி மிக சவாலானதாக இருக்கும்..!ரோஹித் சர்மா

இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “மிகவும் கடினமான சவாலானதாக இருக்கும்” என்று கூறினார். 

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா அல்லது நடைபெறாமல் இருக்குமா  என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றனர் மேலும் இந்தியாஅணி 4 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது, டிசம்பர் 3 முதல் பிரிஸ்பேனில் இந்த டெஸ்ட் தொடங்குகிறது. பகல்-இரவு டெஸ்ட் டிசம்பர் 11 முதல் அடிலெய்டில் நடைபெற உள்ளது. மேலும் இந்தியா அணி ஜனவரி 12 முதல் 17 வரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் பொழுது ரோஹித் சர்மா கூறியது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “ மிகவும் கடினமான சவாலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.