பின்னுக்கு தள்ளிய ரோஹித்..! அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் முதலிடத்தில் கோலி ..!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1 -1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் 9 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 2443 ரன்கள் குவித்து முதலிடத்திற்கு முன்னேறினார். இரண்டாவது இடத்திற்கு கோலியை 2441 தள்ளினார். பின்னர் அடுத்த இறங்கிய கோலி 9 ரன்களில் வெளியேறி 2450 ரன்கள் எடுத்து மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார்.

இதன்மூலம் ரோகித்  பின்னுக்குத் தள்ளி அடுத்த சில நிமிடங்களில் கோலி முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறினார்.

author avatar
murugan