தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய  வானிலை ஆய்வு மையம்.
கடந்த சில நாட்காளாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது.இதன்காரணமாக 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில்  மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் சேலம்,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.