#Breaking: கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கக்கூடாது-உச்சநீதிமன்றம் உத்தரவு

கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகா எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று  உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டும்  என்றும் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.