இன்றைய (30.03.2020)நாள் எப்படி இருக்கு!?ராசிபலன்கள் இதோ!

இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து கொள்வோம்

மேஷம்:  வீண்கவலைகள் நீங்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும்.சண்டைகள் சுமூக முடிவிற்கு வரும்.குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்

ரிஷபம்: எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பணியில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம் : பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களூக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்: மனதில் நிலவி வந்த குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு அதிகரித்து காணப்படும். வாழ்க்கை துணை மீது பாசம் அதிகரிக்கும்.

சிம்மம் : எதிர் காலம் கருதி  எடுக்கும் முடிவுகள் வெற்றிக்கு வித்திடும்.  மன குழப்பம் நீங்கும்.குடும்பத்தினருடன் பொன்னான நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம்.

கன்னி :  கவனத்தோடு செயல்படுவீர்கள்.  நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்து வந்த  காரியங்கள் தற்போது நடக்கும். தொழிலில்  எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.

துலாம் :  அரசியல்,உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, வவு திருப்தி தரும்.திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

விருச்சகம்: குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.மனகலங்கள் அகன்று நம்பிக்கை பிறக்கும்.வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண்கவலைகள் அகலும்.

தனுசு : பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டவாறே நடக்கும். மற்றவர் மத்தியில் மரியாதைக் கூடும்.  எதிர்ப்புகள் விலகும். 

மகரம்: சமர்த்திய பேச்சால் சாதிக்கும் நாள் .வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்.எடுத்த செயலை குறித்த நேரத்தில் முடித்து காட்டுவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட நடக்கும்.எதிர்பார்த்த இடத்திருந்து உதவி கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளின் பராட்டைப்பெறுவீர்கள்.

மீனம் :திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து பாராட்டைப் பெறுவீர்கள்.. குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவங்கள் நடக்கும். 

author avatar
kavitha