இன்றைய (28.03.2020)நாள்!எப்படி இருக்கு!?? ராசிபலன் இதோ!

பஞ்சாங்கம்

இன்று (28.03.2020) சனிக்கிழமை விகாரி வருடம், பங்குனி 15-ம் தேதி நல்ல நேரம் காலை 10.30 – 11.30   மாலை 4.30 – 5.30 ராகு காலம் 9.00 -10.30 எம கண்டம் 1.30 – 3.00 குளிகை 6.00 – 7.30 திதி சதுர்த்தி நட்சத்திரம் பரணி  சந்திராஷ்டமம் சித்திரை,சுவாதி யோகம்: சித்த  சூலம்: கிழக்கு  பரிகாரம்: தயிர் விசேஷம்: சதுர்த்தி விரதம்.
திருநெல்வேலி, பழனி, மதுரை, குன்றக்குடி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், சேஷ வாகனத்தில் கிருஷ்ணாவதாரக் காட்சி.மன்னாா்குடி ராஜகோபால சுவாமி காலை பள்ளியறை சேவை.கீழ்நோக்கு நாள்.

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நிலவிய பிரச்சனைகள் தீரும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்
.    
ரிஷபம்: வேலைகள் சாதகமாக முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.மனதில் தோன்றிய கவலைகளை இறைவழிபாடு மூலமாக நீங்குவீர்கள்
 
மிதுனம்:  எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
 
கடகம் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.மனக்குழப்பம் அகல இஷ்ட தெய்வத்தை வணங்குவீர்கள்.
 
சிம்மம்: வியாபராத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.பிறர்க்கு  உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.மேலும் மனகவலை,குழப்பங்கள் அகல இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்
 
கன்னி:  உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்,கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும்.மேலும் நன்மைகளுக்கு இன்று சதுர்த்தி ,விநாயகரை வழிபடுங்கள்
 

துலாம்:  குடும்பத்தில் கணவன், மனைவி இடையே  நிலவிய பிரச்சனைகள் அகலும்.  குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். நம்பிக்கை மிளிர தும்பிக்கையினை வழிபடுங்கள்

விருச்சிகம்: காரிய தடை அகலும். எந்த செயலையும் எளிதாக எடுத்துக் முடித்துவவிடுவீர்கள்.பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்கத்தில் செல்லும் போது கவனம் தேவை.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டில் கவனத்தை செலுத்துவீர்கள்

தனுசு:  மனதில் இருந்த கவலைகள் எல்லாம் நீங்கி தைரியம் உண்டாகும்.தெளிவு பிறக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும். பிரச்சனைகள் அகலும்.பெற்றோர் மீது பாசம் அதிகரிக்கும்.  

மகரம்:  பிரச்னைகளை எளிதாக தீர்த்து விடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த தகராறுகள் நல்லமுடிவுக்கு வரும்.தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.மனத்தில் ஏற்படும் வீண் கவலைகளை அகற்ற விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளுங்கள்.

கும்பம்:  கஷ்டங்கள் குறையும். சித்தர்கள் வழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் பிடிப்பு ஏற்படும்.

மீனம்: திறமையாக பேசி காரியங்களை சாதித்து  காட்டும் நாள். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும்.

author avatar
kavitha