ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி விரட்டியடித்துள்ளனர். ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் நள்ளிரவு அங்கு வந்த இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், மீன்பிடி சாதனங்களும் சேதமடைந்துள்ளன.
இதனையடுத்து தமிழக மீனவர்கள் கரைத்திரும்பினர்.இலங்கை கடற்படை மற்றும் அந்நாட்டு மீனவர்களின் தொடர் அட்டூழியத்தால் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment