கொரோனா அச்சத்தால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பி.வி.சிந்து!

சமீப காலமாக கொரோனா பாதிப்பு உலகையே மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். 

இந்நிலையில், பிரபலங்கள் பலரும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வதற்காக தனிமையில் இருந்து வருகின்றனர். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி.சிந்து போட்டிகளில் கலந்து கொண்ட பின், கொரோனா தொற்றில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தற்போது தன்னை தானே தனிமைபடுத்தி கொண்டு உள்ளாராம். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.