கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.

கனடா பிரதமர் ஜஸ்டினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.இந்தியா  முழுவதும் 33,050 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது .இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. 8,325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கொரோனா நிலவரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,கனடாவில் வசிக்கும் இந்தியர்களை இந்த நெருக்கடியான தருணத்தில் கவனித்துக் கொண்டதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.