Breaking#கொரோனா#ஆயுதப்படை காவலர் பலி!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆகிய ஆயுதப்படை காவலர் உயிரிழந்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உயிர்களை பலியாக்கி வரும் கொடுந்தொற்றாக உருமாறி உள்ள கொரோனா வைரஸ் தமிழகத்திலும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.மேலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருவது கவலை அளித்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றால் சென்னை ஆயுதப்படை காவலர் நாகராஜன் பாதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சைக்காக  ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 33 வயதே நிரம்பியுள்ள  காவலர்  நாகராஜன் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .கொரோனா பாதிக்கப்பட்டு காவலர் ஒருவரின் பலி கடும் அதிர்வலைகளை அத்துறை சார்ந்தவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
kavitha