புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடை : மார்ச் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல் – முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடைபெற்றது.

இதன் பின்னர்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment