இன்று  மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது ! டெல்லி கலவரம் தொடர்பாக விவாதம்

இன்று  மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது.

2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.எனவே பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 2 ஆம் தேதி  தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

கடந்த 2-ஆம் தேதி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செய்த அமளியால்  ஏதும் நடக்காமல்  ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று  மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது  டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.