சென்றாண்டின் சிறந்த படம் இதுதான்! புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!

பா.ரஞ்சித் தனது நீலம் பட நிறுவனம் மூலம் தயாரித்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கதிர், ஆனந்தி என பலர் நடித்து இருந்தனர்.

இப்படம் பல்வேறு திரைப்பட விருதுகளை வென்றது. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு புதுசேரி அரசு புது கவுரவம் கொடுத்துள்ளது. சென்றாண்டு வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக பரியேறும் பெருமாள் படத்தை தேர்வு செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.