பாகிஸ்தான் இராணுவமே தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்குகிறது!

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது என ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு.
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்குள் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான ஆப்கான் தூதர் மஜீத் கரார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் இயக்கத்தினரிடம் இரவில் பார்க்கும் கண்ணாடி இருந்ததாகவும், இது பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய கண்ணாடி என்றும் இது தீவிரவாதிகளுக்கு எப்படிக் கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….

Leave a Comment