இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை!!பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு

இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு விருப்பமில்லை. கட்டாயத்தின் பேரில் தான் பதிலடி கொடுத்தோம். எங்கள் எல்லைக்குள் நீங்கள் அத்துமீறினால் நாங்களும் அத்துமீறுவோம் என்பதை காட்ட தான் தாக்குதல்.போர் நடந்தால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது.மேலும் இந்திய பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Comment