எங்கள் அப்பா எங்களது வாழ்க்கையை சீரழித்து விட்டார் : மகளின் உருக்கமான வாட்ஸ் அப் மெசேஜ்!

பெங்களுருவை சார்ந்த சித்தய்யா இவர் அங்கு உள்ள மின் வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.இவர் மனைவி ராஜேஸ்வரி .இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.மானசா என்பவர் 12-ம்வகுப்பும் , பூமிகா என்பவர் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்று கிழமை மானசா தனது மாமாவான புட்டசாமிக்கு ஒருவாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பி உள்ளார்.அந்த மெசேஜை பார்த்த புட்டசாமி அதிர்ந்து போனார்.அந்த மெசேஜில் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல அப்பா நல்ல அப்பா கிடைக்க வேண்டும் அப்படி கிடைத்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆனால் எங்கள் அப்பா எங்களது வாழ்க்கையை சீரழித்து விட்டார். எங்கள் சாவுக்கு காரணம் அவர் தான் காரணம் என அந்த மெசேஜில் இருந்தது.

இந்த அந்த மெசேஜை படித்த புட்டசாமி  உடனடியாக தனது தங்கை வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரது வீட்டின் உள்புறமாக தாழ் போடப்பட்டு இருந்தது.பின்னர் கதவை உடைத்து சென்று பார்த்த போது தனது தங்கை மற்றும் தனது மருமகள்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து அங்குவந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு  சித்தய்யா ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்தது தான் காரணம் என கூறப்படுகிறது.

இந்த தொடர்பு விட்டுவிடும்படி பல முறை ராஜேஸ்வரி கூறியுள்ளார்.இது தொடர்பாக பல முறை இருவருக்கும் சண்டை வந்து உள்ளது.இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன் சித்தய்யா தமிழகம் வந்து உள்ளார்.வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

author avatar
murugan