எங்களுக்கு விமான சேவை வேண்டாம் – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.!

தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் மாதம்  25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகின்ற  25-ம்  தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என அந்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  தமிழகத்தில் வரும் 25 -ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பிரதமருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜூன் மாதத்திற்கு பிறகு  தமிழகத்தில் விமான சேவை தொடங்கலாம் என  எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk