முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் மீது காலணி வீச்சு!

ஒருவர் காலணியை வீசி எறிந்தது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப் மீது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் ஒரு கல்லூரி விழாவில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சரீப்  கலந்துகொண்டார். இருக்கையில் இருந்து எழுந்து மேடைக்குப் பேச மைக் முன் அவர் வந்தபோது ஒருவர் காலணியை நவாஸ் மீது வீசி எறிந்ததுடன் மேடையில் ஏறிவந்து நவாசுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காலணி நவாசின் மார்பில் பட்டுக் கீழே விழுந்தது. இதற்குள் மேடையில் இருந்த மற்றவர்கள் காலணி வீசியவரைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தலா முனாவர் என்கிற அவர் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் எனத் தெரியவந்தது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment