இராணுவ வீரரின் பைக்கிற்கு தீவைத்த மர்ம ஆசாமிகள்.!

  • கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். 
  • வழக்கம்போல வீட்டிற்கு அருகே பைக்கை நிறுத்தி வைத்த போது மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிளுக்கு  தீ வைத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன இருளாண்டி. இவரது மகன் மகேஸ்வரன் (35) இவர் ராணுவ வீரராக வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தற்போது தனது கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் வீட்டிற்கு அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துவது வழக்கம்.  வழக்கம்போல வீட்டிற்கு அருகே நேற்று முன்தினம் அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் நிறுத்தியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் அவரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். மோட்டார் சைக்கிள் தீ எரிவதை  பார்த்த மகேஸ்வரன் தீயை அணைக்க முயற்சி செய்தார்.

ஆனால் அவர் தீயை அணைப்பதற்குள் மோட்டார் சைக்கிள் முழுமையாக கருகியது. இதையெடுத்து கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பெயரில் தீவைத்து பைக்கை எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

author avatar
Dinasuvadu desk