அதிசயம்.! ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் அதிர்ச்சியடைந்த மக்கள்.!

  • சீனாவில் ஒரே நேரத்தில் 3 சூரியன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்.
  • சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது இதுபோன்ற நிகழ்வு ஏற்படும்.

ஒரே நேரத்தில் 3 சூரியன்கள் தெரிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ள மேற்குப் பகுதியின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்காஸ் நகரத்தில் வியாழக்கிழமை இந்த அதிசய நிகழ்வு நடந்தது. முதலில் இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட மக்கள் அடுத்த சில மணி நேரத்தில் 3-வது சூரியனும் வானில் உதயமானதால் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சூரிய ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது வழக்கமாக பனிப்பிரதேசத்தில் தெரியும் இந்த நிகழ்வு பனிப்பொழிவு குறைந்த ஸின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்டது. இது ஒரு அதிசய நிகழ்வுதான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்