லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோடைக்கால சீசன் தற்போது தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி,தேனி  உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .

ஏனைய மாவட்டங்கள் மற்றும்  சென்னை ,புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.