நடிகர் விவேக் ஓபராய் வெளியிட்ட மீம்ஸ் விவகாரம்! மகளீர் ஆணையம் நோட்டிஸ் !

நடிகர் விவேக் ஓபராய் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை, கிண்டலடிப்பதாக கூறி, தனது ட்வீட்டர் பக்கத்தில், மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த மீம்ஸில் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான்கான், அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மக்கள் போன்ற பிரபலங்களின் புகைப்படங்களை பதிவிட்டு மீம்ஸ் பதிவிட்டார்.

இவரது, இந்த மீம்ஸிற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய ஓபராய், தான் தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஏற்கனவே ஒருவர் உருவாக்கி இருந்த மீம்ஸை சுட்டிக்காட்டியே தாம் கருத்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இவரது இந்த பதிவு, சிறுமி மற்றும் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது போன்றது என தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில்,  இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மகளீர் ஆணையம் ஓபராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment