ஒரே நாளில் 3,214 பேருக்கு கொரோனா.! மும்பையில் மட்டுமே 846 பேருக்கு தொற்று உறுதி.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டுமே 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதில், இந்திய அளவில் கொரோனா வைரஸின் தாக்கத்தில் முதன்மை மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இன்று மட்டுமே 3,214 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனால் அம்மாநிலத்தில், கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,39,101-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டுமே 248 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதில் மும்பையில் இன்று மட்டுமே 846 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேயில் இன்று மட்டுமே 820 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.