முத்தம் கொடுக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டார்!

மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் பகுதியில் பிங்கி (18) எனும் பள்ளி மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது ஆண் நண்பரான ராமன் சிங்குடன் கடந்த வியாழக்கிழமை அன்று பிஜாபூரி எனும் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

பின்னர், அவர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இது குறித்து பிங்கியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்,அவரை தேடும் பணி தீவிரமடைந்தது. தேடல்களுக்கு பின்னர், அவரது உடல் பிஜாபூரரி காட்டுக்குள் கண்டறியப்பட்டது. அவள் பின் தலையில் பலமாக அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

பின்னர், நடைபெற்ற தீவிர விசாரணையில் ராமன் சிங்குடன் பிங்கி சென்றது நிரூபணமாகி அவரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் நடந்தவற்றை ராமன் சிங் போலீசில் கூறினார். அதாவது, காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமன் சிங்  பிங்கியிடம் முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது பிங்கி மறுக்கவே, பிங்கியை தள்ளி விட்டார், இதில் பிங்கி தலையில் பலமாக அடிபட்டு இறந்துவிட்டார் என கூறினான்.  அதன் பின்னர் ராமன் சிங் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரிகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.