முதல் முறையாக சந்தித்த 4 மணி நேரத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ..!

கொல்கத்தாவை சேர்ந்தவர்  சுதிப் கோஷல் என்ற இளைஞரும் ,பிரித்மா பானர்ஜி என்ற இளம் பெண்ணும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். பின்னர் இருவருமே ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக இருவரும் தங்களது காதலை சொல்லவில்லை.இருவருக்கும் நேரில் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஒரு கோவிலில் துர்க்கை பூஜை கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர்.அப்போது  இருவரும் மனம்விட்டு பேசினார்.
அப்போது சுதிப் ,பிரித்மாவிடம்  தனது காதலை கூறினார். பின்னர் இருவரும் சில மணிநேரம் தனித்தனி இடத்திற்கு சென்று வீடியோ கால் பேசினர். இதை தொடர்ந்து 4 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இருவரும் அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்படி கோவிலில் சுதிப் ,பிரித்மாவின் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார். அவர்களின் திருமணத்தை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

author avatar
murugan