கொரோனா பரவலை தடுக்கும் முழு ஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய முழு ஊரடங்கை அரசு அறிவித்து செயல்படுத்தியது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் இந்த ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் தளர்த்தப்பட்டது. இந்நிலையில்,சென்னை திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேபோல் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 80 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடரும். மும்பை, டெல்லி, புனே, ஜெய்ப்பூர், உள்பட 30 மாநகராட்சி, நகராட்சிகளில் 80% பாதிப்பு உள்ளது. நாடு முழுவதும் மூன்றாம் கட்ட தேசிய ஊரடங்கு நாளை நிறைவடைய உள்ளது.