கடைசி ஒரு நாள் போட்டி ! முக்கிய வீரருக்கு காயம்

  • வருகின்ற 22 -ஆம் தேதி 3 வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.
  •  தீபக் சஹருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடியது .முதல் போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.தொடரை உறுதி செய்யும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.இந்நிலையில் வருகின்ற 22 -ஆம் தேதி 3 வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர்  விலகியுள்ளார்.  தீபக் சஹருக்கு பதில் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.