ஜாலி பீச்சில் இந்திய வீரர்களுடன் குத்தட்டம் போட்ட கோலி…!

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தப் பயணத்தில் முதலில் நடைபெற்ற டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

இதற்காக மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டி கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி அன்று முடிந்தது. போட்டி இறுதியில் சமனில் முடிந்தது. இன்று முதல் டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அண்டிகுவா பகுதியில் உள்ள ஜாலி கடற்கரையில் இந்திய அணியின் கேப்டன் கோலி , இஷாந்த் சர்மா, ரோஹித் ஆகிய ஆகிய  வீரர்கள் உற்சாக குளியல் போட்டனர்.

அந்த புகைப்படத்தை டுவிட்டரில் இந்திய அணியின் கேப்டன் கோலி பதிவிட்டுள்ளார். மேலும் “வீரர்களுடன் பீச்சில் ஒரு அதிர்ச்சியூட்டும் நாள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
murugan