ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் சிறுவன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்!கொலையை மறுக்கும் காவல்துறை அதிகாரி!

2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுவதை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீது ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக பல பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் என்ற 15 வயது சிறுவன் தீக்காயங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அந்த சிறுவன் இறப்பதற்கு முன்பு நான்கு நபர்கள் என்னை கடத்தி சென்று ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி கூறினர் ஆனால் நான் கூற மறுத்ததால் என்னை தாக்கினர் என்று காவல்துறையினருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிறுவன் உயிரிழந்த சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் உயிரிழந்த சிறுவன் இரண்டு விதமாக பேசுவதாக கூறியுள்ளார்.

முதலில் அந்த சிறுவன் மஹாராஜ்பூர் கிராமத்தில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் ஹடீஜா கிராமத்தில் தன்னை கடத்திச் சென்றதாகவும் கூறியதாக கூறியுள்ளார்.இதை பார்க்கும் போது அந்த சிறுவனுக்கு யாரோ சொல்லி கொடுத்து பேசுவது போல உள்ளது என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த சிறுவன் கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை பார்க்கும் போது அந்த சிறுவன் அங்கு இல்லாததாகவும் அதை பார்த்தவர்களோ அந்த சிறுவன் தன்னை  தானே தீவைத்து கொண்டதாக கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.