ஜெயலலிதா வாழ்ந்த “வேத இல்லம்” நினைவிடமாக ஆக்குவது அவசியமா…! நீதிமன்றம் கேள்வி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்து வந்த இல்லமான வேதா இல்லத்தை மக்கள் வரிப் பணத்தில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்ன அவசியம் என்று சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயலலிதாவின் பெயரை நிலைக்கச் செய்ய பல வழிகள் இருக்கும் போது அவர் வாழ்ந்த இந்த இல்லம் மட்டும் ஏன் நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். கோடநாட்டில் நாட்டில் அவர் ஓய்வு எடுக்க செல்வார் என்பதால் அதையும் நினைவு இல்லமாக மாற்ற முடியுமா என்றும் கேட்டுள்ளனர். அமைச்சர்கள் முதல் அனைவருமே தினமும் பேசத்துவங்கும் மாண்புமிகு புரட்சித்தலைவி என்று புகழ்ந்து தானே பேசுகிறீர்கள் அது போதாதா என்றும் வினவியுள்ளனர்.

ஜெயலலிதா  வாழ்ந்த இல்லமானது சென்னையில் மையமான இடத்தில் இருப்பதால் 10 கிரவுண்ட் நிலத்துடன் சேர்த்து அதன் மொத்த மதிப்பு 100 கோடி வரை இருக்கும். ஆனால், தமிழக  அரசு அதனை வெறும் 35 கோடிக்கு மட்டுமே ஏலத்திற்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.