ஊழல் குற்றச்சாட்டு  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பதிவு ?

ஊழல் குற்றச்சாட்டு  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பதிவு செய்ய ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நெதன்யாகு மீது இரண்டு ஊழல் குற்றச்சாடுகள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளன. போலீசாரின் பரிந்துரைகள் மற்றும் ஆதாரங்கள் இஸ்ரேல் நாட்டின் அட்டர்னி ஜெனரல் அவிச்சை மண்டெல்ப்ளிட்டிடம் (Avichai Madelblit) ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்துவரும் அவர் நெதன்யாகு மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வார்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய நெதன்யாகு உண்மை விரைவில் வெளிவரும் என்றும், தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு மக்கள் ஆதரவுடன் பதவிக்கு வருவேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment