சென்னையின் எப்சி-பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் மோதல்!ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டி மோதல் …

சென்னையின் எப்சி அணி இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட  தகுதி பெற்றுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற இரண்டாம்கட்ட அரையிறுதிப் போட்டியில் சென்னை மற்றும் கோவா அணிகள் மோதின. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சென்னை அணி 2 கோல் அடித்தது.

90வது நிமிடத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்த நிலையில், கோவா அணியால் கோல் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் 3-0 என்ற கணக்கில் சென்னையின் எப்சி அணி வெற்றி பெற்றது. இரண்டு அரையிறுதிச் சுற்று முடிவுகளின் அடிப்படையில், 4-1 என்ற கணக்கில் சென்னை அணி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.

சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் இறுதிப் போட்டி 17ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment