இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும்! என் ஆதரவு எப்போதும் உண்டு- சோயிப் அக்தர்

உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடித்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா , நியூஸிலாந்து ,இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்று உள்ளது. இந்நிலையில் நாளை நியூஸிலாந்து அணியும் ,இந்திய அணியும் முதல் அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.இதை பற்றி அக்தர் கூறுகையில் ,அரையிறுதி போட்டியில் இருக்கும் அழுத்தத்தை நியூஸிலாந்து அணி தாங்க முடியாமல் வெளியேறும் என கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணி  உலகக்கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன்.இந்திய அணிக்கு எப்போதும் எனது ஆதரவு உண்டு இந்திய அணியில் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த தொடரில் நியூஸிலாந்து அணிக்கு நிகராக பாகிஸ்தான் அணி விளையாடியது ஆனால் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் வெளியேறியது வருத்தத்தை தருகிறது என கூறினார்.

author avatar
murugan