இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பூடான் நாட்டில் வெடித்து சிதறியது! இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்தனர்!

இந்திய ராணுவம் பூடான் நாட்டு ராணுவ வீரர்களுடன் இணைந்து கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சி பூடான் நாட்டில் நடைபெற்றது. இதற்காக இந்திய விமானப்படை வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டருடன் பூடான் நாட்டில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது இந்திய ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய விமான வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் பயிற்சியளிக்க, பூடான் நாட்டு ராணுவவீரர் பயின்று கொண்டிருந்தார்.

வானில் இந்த பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எதிர்பாராத விதமாக ராணுவ ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய ராணுவ வீரரும், பூடான் நாட்டு ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், தரையிறங்குகையில் இருந்த மோசமான வானிலை காரணமாகவும், மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் இறங்கும் இடம் தெரியாமல் மலையில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.