முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி!இந்திய அணி படுதோல்வி …..

கேப்டவுனில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களில் ஆட்டமிழந்தது. 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 130 ரன்களுக்கு சுருண்டது.
208 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினர். ஷிகார் தவான் 16 ரன்களிலும், விராட் கோலி 28 ரன்களிலும் வெளியேறினர். அஸ்வின் நிதானமாக விளையாடி அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்காவின் அசுர பந்து வீச்சால், 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி தோல்வியை தழுவியது.
சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்கா வீரர் ஃபிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பிரீடம் டிராபி தொடரில் ஒன்றிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் பெற்றது.
source: dinasuvadu.com

Leave a Comment