இந்திய ராணுவ வீரர் இறந்ததை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி  மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில்  பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்  அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் இன்று காலை 06.30 மணி அளவில் நடைபெற்றது.

இந்திய ராணுவம் தரப்பிலும் எதிர்த்தாக்குதல் கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய  ராணுவ வீரர் ஒருவர் மரணமடைந்தார். இறந்த  டேராடூனை சார்ந்த லன்ஸ் நாயக் சந்தீப் என தெரியவந்தது.

இவர் 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். கடந்த சில நாட்களாக இரு நாடு படைகளுக்கு  இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவ வீரர் லன்ஸ் நாயக் சந்தீப் இறந்ததை தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் தாக்குதலை நவ்ஷேரா எல்லை அருகே இருந்த பாகிஸ்தான் ராணுவ சாவடி மீது  நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

author avatar
murugan