தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்தது!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,500-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 87,235 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 20 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,551 ஆக உயர்ந்துளளது.

இன்று உயிரிழந்தோரில் 50 வயதிற்கு உட்பட்ட 8 பேரும், 70-80 வயதில் 17 பெரும் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் இன்று தனியார் மருத்துவமனையில் 21 பேரும், அரசு மருத்துவமனையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.44 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,456 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 201 பெரும், திருவள்ளூரில் 168 பெரும், மதுரையில் 160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 51 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இதுவரை 1,095 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.