கொரோனாவை இறக்குமதி செய்தது பணக்காரர்கள்.!முதலமைச்சர் பழனிசாமி.!

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி , தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும் , தமிழகத்தில் படிப்படியாக கொரோனா குறைந்து வருகிறது என்றும் என்றும் மட்டும் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சில நாட்களில் பாசிட்டிவ் ஆக உள்ளவர்கள் நெகட்டிவாக கொண்டுவந்துவிடுவோம் என கூறினார். கொரோனா பணக்காரர்களுக்கு வந்த நோய் தான். ஏழைகளுக்கு  எங்கு வந்தது..? பணக்காரர்கள் தான்  வெளிநாட்டில் இருந்தும் , வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவந்து இறக்கப்பட்ட நோய்.
பணக்காரர்களை கண்டால்  பயமாக இருக்கிறது.அவர்கள் தான்  வெளிநாட்டுகளில் இருந்து நோயை இறக்குமதி செய்தனர் என தெரிவித்தார்.

author avatar
murugan