நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! மத்திய அரசுக்கு கடிதம் – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத உள்ளோம் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன.நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வை நடத்தும் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத உள்ளோம்.மருத்துவ மாணவர் சேர்க்கையில் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.