சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்த கணவன்!திடுக்கிடும் தகவல்!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வாழ்ந்து வந்தவர் பிரதீப்.அங்கு இவர் தமது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருந்துள்ளார்.இவர் ஒரு பயங்கரமான குடிகாரன் என்று அங்குள்ளவர்கள் சொல்கின்றன.

இவருக்கு தமது மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் அதிகமாகவே இருந்துள்ளது.அதன் காரணமாக அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டவாறே இருந்துள்ளார்.

ஆனாலும் அவரின் சந்தேகம் ஓய்தவாறு இல்லை.என்னசெய்வது என்று தீவிரமாக யோசித்து கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து கடந்த புதன் கிழமை அன்று இரவு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் நால்வரின் வாயிலும் துணியை கட்டிவிட்டு சத்தம் வெளியே கேட்காதவாறு செய்துள்ளார்.பின்பு அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அடுத்த நாள் காலை இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளெ சென்றுள்ளனர்.அப்போது இரண்டு குழந்தைகளும் பிரதீப்பும் உயிரிழந்திருந்துள்ளனர்.பின்னர் அவரது மனைவியும் ஒரு குழந்தையும் உயிருக்கு போராடி இருந்துள்ளது.

உடனே காவல்துறையினர் அவர்களை ஆம்புலன்சில் அழைத்து செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பிரதீப் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தாம் தான் விஷம் கொடுத்ததாகவும் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை கட்டி வைத்ததாகவும் கடிதத்தில்  எழுதியுள்ளார்.

இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.