நடத்தையில் சந்தேகம்..! ஆத்திரமடைந்து 2வது மனைவியை கொன்ற கணவன்.!

சென்னையில் தன்னுடைய 2-வது மனைவி மீது சந்தேகமடைந்து கொலை செய்துள்ளார்.

சென்னையை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரமணி என்பவருக்கும் திருமணம் முடிந்தது ராஜ் குமார் ரமணியை இரண்டாவதாக திருமணம் செய்தார், மேலும் ராஜ்குமார் வாட்ச்மேன் ஆக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் ரமணி சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று பார்த்ததும் இரட்டை குழந்தை வளர்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள், மேலும் திடீர் என்று ரமணி தனது கருவை கலைத்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பித்திருந்த ஊரடங்கு காரணமாக ராஜ் குமார் வேலைக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார், இந்த நிலையில் ராஜ்குமார் தனது மனைவி ரமணியை சந்தகே பட்டு எப்பொழுதும் சண்டை போடுவதாக தெரிகிறது, வீட்டில் இருந்தால்தான் சண்டை வருகிறது என்று ரமணி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் இதனால் ராஜ் குமார் தனது வீட்டிலே தனியாக வசித்து வந்தார், சிறிது நாட்கள் கழித்து மனைவி ரமணியை அழைத்துள்ளார் ஆனால் அவர் வரவில்லை இதனால் கோபமடைந்த ராஜ் குமார் ரமணியை கொலை செய்யதிட்டமிட்டு மார்க்கெட் சென்று அருவாள் ஒன்று வாங்கியுள்ளார்.

அதன் பிறகு தனது மனைவியை சமரசம் செய்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார், வீட்டிற்கு வந்து சிறிது நேரம் பேசியுள்ளார்கள், மீண்டும் இருவருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த ராஜ் குமார் வீட்டில் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து ரமணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர், மேலும் காவல்துறையினர் ராஜ் குமார் ர் தனது மனைவி ரமணியை வெட்டிய காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது, இதனால் காவல்துறையினர் சுலபமாக குற்றவாளி அவர்தான் என்று கண்டுபிடித்தனர், மேலும் ராஜ் குமாரை கைது செய்தனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.