இனிப்பான கற்கண்டு வடை செய்வது எப்படி?

சுவையான கற்கண்டு வடை செய்யும் முறை.

நாம் வடை என்றாலே உளுந்து வடை, கார வடை, பருப்பு வடை போன்ற வடைகளை தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் சுவையான கற்கண்டு வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • உளுந்தம்பருப்பு – 1 கப்
  • பச்சரிசி – கால் கப்
  • கல்கண்டு – 1 கப்
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் உளுந்தம்பருப்பு மற்றும் அரிசியை ஓரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை வடை பதத்திற்கு அரைக்க வேண்டும். நன்கு பதத்திற்கு அரைபட்டதும், கற்கண்டையும் சேர்த்து அரைக்க வேண்டும்.

பின் எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, மாவை சிறு வடைகளாக தட்டி போட்டு நன்கு வேகா வைக்க வேண்டும். இப்பொது சுவையான கற்கண்டு வடை தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.