கனமழை : நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை ..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில்  கனமழை பெய்து வருகிறது. மேலும் இரண்டு நாள்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தொடர்ந்து கன பெய்து வருவதால் சாலைகள் மற்றும் வீடுகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால் நாளை  புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

author avatar
murugan