150 விக்கெட் வீழ்த்திய வீரர்..!அதில 4 வது வீரர் _ இதுல 3 வது வீரர்…!புலவரின் வீரச்செயல்..!

இந்தியாவில் 12  வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் 8 அணிகள் பங்கேற்று களமிறங்கியது.இந்த அணிகள் எல்லாம் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட போதிலும் சென்னை மற்றும் மும்பை தகுதிப்பெற்று இறுதிப்போட்டியில் யாருக்கு கோப்பை என்று மோதுகிறது.இந்நிலையில்  சென்னை   மற்றும் டெல்லி அணிகள் மோதிய போட்டியில் சென்னை வெற்றி பெற்றது.

Image result for csk

அதில் சென்னை  அணி வீரரான ஹர்பஜன் சிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரூதர்போர்டை அவுட் ஆக்கியதன் முலமாக  ஐபிஎல் போட்டி ஹர்பஜன் 150 விக்கெட் எடுத்த 4 வது வீரர் மற்றும் 3வது இந்திய வீரர் என்ற தனது கிரிக்கெட் சாதனை எட்டியுள்ளார்.

மேலும்  ஐபிஎல் போட்டி அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் முதலிடத்தில் 169 விக்கெட்டுகள் எடுத்து மும்பை அணியின் லசித் மலிங்கா மற்றும் இரண்டாவது இடத்தில் 156 விக்கெட் எடுத்து   டெல்லி அணியின் அமித் மிஸ்ரா உள்ளார் .அதே போல 150 விக்கெட் எடுத்து  சென்னை  அணி வீரரான ஹர்பஜன் சிங்  அவரோடு கொல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவுடன் இணைந்துள்ளார்.

author avatar
kavitha

Leave a Comment