அழகை அதிகரிக்க மார்பக அறுவை சிகிச்சை செய்த பட்டதாரி பெண்- பின்பு நடந்த சோகத்தால் குடும்பத்தினர் வருத்தம்!

  • அழகை அதிகரிக்க ஆசைப்பட்டு இளம் பெண் செய்த மார்பக அறுவை சிகிச்சை 
  • எழமுடியாத கோமாவுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்.

பெண்களுக்கு மார்பகம் தான் அழகு. ஆனால், அது கடவுள் தந்தாக இருந்தால் மட்டுமே அழகுடன் கூடிய ஆரோக்கியமாக இருக்கும். சிலர் தங்களது அழகை அதிகரிக்க மார்பகத்தின் அளவை குறைத்தோ, கூட்டியோ அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். சில சமயங்களில் அழகை தரும் அந்த அறுவை சிகிச்சை தற்போது ஆபத்தை தந்துள்ளது.

அழகும் ஆபத்து தான் என்பதை இதன் மூலமாவாவது புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அமெரிக்காவில் கொலராடோ நகரை சேர்ந்த 18 வயதுள்ள இளம் பெண் தான் எமலின் குயின். இவர் உயர்நிலை பட்டம் பெற்ற அழகுள்ள பெண் ஆவார்.

இவர் தனது அழகை இன்னும் அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஆனால், அவர் அறுவை சிகிச்சைக்கு பிறகு எழவே இல்லையாம். அவரால் பேச முடியவில்லை, நடக்க முடியவில்லை ஒன்றுமே செய்ய முடியாதாம்.

இது குறித்து அவரது தந்தை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மற்றும் செவிலியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும், இது ஒரு விதமான கோமா நிலை என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் இப்படி நடந்திருக்கலாம் என மருத்துவர்கள் மற்றும் ஊடகங்கள் கூறுகின்றனர்.

author avatar
Rebekal