விஜய்காக எழுதப்பட்ட கதையில் 'பப்பி' நாயகன்! கௌதம் மேனனின் அடுத்த  அதிரடி அப்டேட்!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருந்த திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தளபதி விஜய் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். இதனால் அப்படம் அப்போது டிராப் செய்யப்பட்டது.

தற்போது இதே கதையை ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று என புதிய படமாக கெளதம் மேனன் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக பப்பி படத்தில் நடித்திருந்த வருண் நடிக்க உள்ளார். இப்படத்தை கோமாளி, பப்பி ஆகிய படங்களை தயாரித்த ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.