'நான் கடந்த இரண்டு மாதமாக தான் சந்தோஷமான வேலை செய்கிறேன்!' – கெளதம் மேனன் உருக்கம்!

தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவர் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெளியே வர முடியாமல் கடும் நிதி பிரச்சனையில் சிக்கி இருந்தன. இதனால் இவர் சில வருடங்களாக மற்ற படங்களையும் இயக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், தற்போது இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தினை வெளியிட உதவி செய்துள்ளார். அவரே படத்தை வாங்கி தற்போது வரும் வெள்ளிக்கிழமை வெளியிட உள்ளார்.
இந்நிலையில் நேற்று வேல்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற விழாவில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன், ‘ வேலை முடிந்து நான் வீட்டிற்கு சென்றால், கவலைகளை மறந்துவிடுவேன். ஆனால், சில வருடங்களாக நான் மிகவும் கஷ்டமாக உணர்ந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக தான் நான் வேளையிலும் சந்தோசமாக பழையபடி செயல்படுகிறேன். அதற்கு முழு கரணம் வேல்ஸ் பட நிறுவன தலைவர் ஐசரி கணேசன் அவர்கள் தான். நான் தற்போது வருணை நாயகனாக வைத்து ஜோஸ்வா எனும் படத்தை இயக்கி வருகிறேன் பாதி படம் முடிந்துவிட்டது. காதலர் தினத்தில் படம் வெளியாக உள்ளது.’ என தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.