ககன்யான் திட்டம், 4 வீரர்கள் தேர்வு – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

  • விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
  • மேலும் சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார். 

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,க‌கன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட வீர‌ர்களுக்கான பயிற்சி ஜனவரி 3ம் வாரம் தொடங்கும்.

வேகமாக சென்று நிலவின்மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதால் 7 ஆண்டுக்கு தகவலை அனுப்பும்.சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதால் 7 ஆண்டுக்கு தகவலை அனுப்பும். சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 600 கோடி ரூபாயில் சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.